Tuesday, January 18, 2011

அடியே..................!

என் கவிதையிலும் மலர் வாசம்
உன் பெயரால் வந்ததடி!

நீ எனக்கு இல்லையென்றல்-மனம்
செத்துபோக சொல்லுதடி!

உனைப்பற்றிய நினைவுக்கு-நல்
நினைவாலயம் வேண்டுமென்றே!

நித்தம் எனதுயிரை தினம்
தக்க வைத்து கொண்டேனடி!

நீ பத்து அடி விலகினாலும்-எனக்கு
பத்து மைல் ஆகுதடி!

நீ பதுங்கி நின்று பார்க்கையிலே
மனம் பஞ்சுப் பஞ்சாய் பறக்குதடி!

உன் முகமதனை தினம் பார்க்க
என் அகமனது ஏங்குதடி!

இந்த அண்டமே உனைப் பார்க்க
இந்த அகிலமே சுற்றுதடி!

உனதழகை வர்ணிக்க-புவியில்
கவிதைகளே இல்லையடி!

அதை வெல்ல நான் நினைத்து
கவிதை எழுதி தோற்றேனடி!

No comments:

Post a Comment