Wednesday, March 9, 2011

அடியே..................!

  • என் கவிதையிலும் மலர் வாசம்
  • உன் பெயரால் வந்ததடி!
  • நீ எனக்கு இல்லையென்றல்-மனம்
  • செத்துபோக சொல்லுதடி!
  • உனைப்பற்றிய நினைவுக்கு-நல்
  • நினைவாலயம் வேண்டுமென்றே!
  • நித்தம் எனதுயிரை தினம்
  • தக்க வைத்து கொண்டேனடி!
  • நீ பத்து அடி விலகினாலும்-எனக்கு
  • பத்து மைல் ஆகுதடி!
  • நீ பதுங்கி நின்று பார்க்கையிலே
  • மனம் பஞ்சுப் பஞ்சாய் பறக்குதடி!
  • உன் முகமதனை தினம் பார்க்க
  • என் அகமனது ஏங்குதடி!
  • இந்த அண்டமே உனைப் பார்க்க
  • இந்த அகிலமே சுற்றுதடி!
  • உனதழகை வர்ணிக்க-புவியில்
  • கவிதைகளே இல்லையடி!
  • அதை வெல்ல நான் நினைத்து
  • கவிதை எழுதி தோற்றேனடி!

No comments:

Post a Comment