- என் கவிதையிலும் மலர் வாசம்
- உன் பெயரால் வந்ததடி!
- நீ எனக்கு இல்லையென்றல்-மனம்
- செத்துபோக சொல்லுதடி!
- உனைப்பற்றிய நினைவுக்கு-நல்
- நினைவாலயம் வேண்டுமென்றே!
- நித்தம் எனதுயிரை தினம்
- தக்க வைத்து கொண்டேனடி!
- நீ பத்து அடி விலகினாலும்-எனக்கு
- பத்து மைல் ஆகுதடி!
- நீ பதுங்கி நின்று பார்க்கையிலே
- மனம் பஞ்சுப் பஞ்சாய் பறக்குதடி!
- உன் முகமதனை தினம் பார்க்க
- என் அகமனது ஏங்குதடி!
- இந்த அண்டமே உனைப் பார்க்க
- இந்த அகிலமே சுற்றுதடி!
- உனதழகை வர்ணிக்க-புவியில்
- கவிதைகளே இல்லையடி!
- அதை வெல்ல நான் நினைத்து
- கவிதை எழுதி தோற்றேனடி!
No comments:
Post a Comment