கொழுக்கட்டையே கொழுக்கட்டையே ஏ(ன்) வேகல? மழயும் பேஞ்சிச்சு நா வேகல மழயே மழயே ஏம் பேஞ்சிங்க? புல்லு மொளைக்க நாம் பேஞ்சேன் புல்லே புல்லே ஏம் மொளச்சிங்க? மாடு திங்க நா மொளச்சேன் மாடே மாடே ஏந் தின்னீங்க? பாலு கறக்க நாந் தின்னேன். பாலே பாலே ஏங் கறந்தீங்க? பால்காரர் கறந்தார் நா கறந்தேன். பால்கார்ரே பால்கார்ரே ஏங் கறந்தீங்க? அம்மா சொன்னாங்க நாங் கறந்தேன். அம்மா அம்மா ஏஞ் சொன்னீங்க? பாப்பா அழுதுச்சு நாஞ் சொன்னேன். பாப்பா பாப்பா ஏ அழுதீங்க? எறும்பு கடிச்சுச்சு நா அழுதேன். எறும்பே எறும்பே ஏங் கடிச்சீங்க? எங்க புத்துக்குள்ள கைய வுட்டா சும்மாருப்பமோ? |
No comments:
Post a Comment